Home இந்தியா உயிரிழந்த டாஸ்மாக் ஊழியரின் மனைவிக்கு நிதியுதவி, அரசுப்பணி: ஜெயலலிதா உத்தரவு

உயிரிழந்த டாஸ்மாக் ஊழியரின் மனைவிக்கு நிதியுதவி, அரசுப்பணி: ஜெயலலிதா உத்தரவு

410
0
SHARE
Ad

jayalalithaaசேலம், ஆகஸ்ட் 6- சேலம் மாவட்டம் புதுப்பாளையத்திலுள்ள மதுக்கடை மீது நேற்று முன்தினம் இரவில் போராட்டக்காரர்கள்  பெட் ரோல் குண்டு வீசித் தாக்கியதால் ஏற்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்த விற்பனையாளர் செல்வம் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுவதோடு, அவரது மனைவிக்குச் சத்துணவு மையத்தில் அரசாங்க வேலையும் அளிக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மேலும், குடும்ப நல நிதி, தொழிலாளர் வைப்புத் தொகையுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றின் பணப் பயன்கள் மற்றும் இதர பணப் பலன்களையும் உடனடியாக அவரது குடும்பத்திற்கு வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இத்தகைய கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் எனக் கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு முதலமைச்சர் ஜெயல‌லிதா உத்தரவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice