Home இந்தியா ஆந்திராவில் ரயில் விபத்து: 6 பேர் பலி!

ஆந்திராவில் ரயில் விபத்து: 6 பேர் பலி!

463
0
SHARE
Ad

train_accidentஅனந்தபூர் – ஆந்திராவில் இன்று அதிகாலை, பெங்களூரு நான்டட் எக்ஸ்பிரஸ் ரயில், இருப்புப் பாதை சந்திப்பைக் கடக்க முயன்ற லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியான 6 பேரில் ஒருவர் கர்நாடகாவின் சட்டமன்ற உறுப்பினர் என்று கூறப்படுகிறது.