Home Featured நாடு பெர்சே 4 மஞ்சள் ஆடைகளை அணிவது சட்டவிரோதமானது – அரசு அறிவிப்பு

பெர்சே 4 மஞ்சள் ஆடைகளை அணிவது சட்டவிரோதமானது – அரசு அறிவிப்பு

827
0
SHARE
Ad

bersih (2)கோலாலம்பூர் – பெர்சே 4 சின்னம் பொறிக்கப்பட்ட மஞ்சள் சட்டையை அணிவது தற்போது முதல் சட்டத்திற்குப் புறம்பானதாகக் கருதப்படுகிறது.

காரணம் அரசாங்கம் இன்று மாலை அச்சட்டைகளை ‘விரும்பத்தகாத பொருளாக’ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பெர்சே 4.0 சின்னம் கொண்ட மஞ்சள் ஆடைகள், அச்சிடப்பட்ட காகிதங்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் ஆகியவை தற்போது சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

 

 

Comments