இது குறித்து விஸ்டில்புளோவர் ( whistle blower) இணையதளம் வெளியிட்டுள்ள தகவலில், இண்டர்போல் பொதுச்செயலாளரும், அரசு சாரா இயக்கங்களில் நியாயமான அனைத்துலக விசாரணை அமைப்பின் தலைவருமான ஜர்ஜென் ஸ்டாக் டு ஜாகோ ரூசெல் வெளியிட்டுள்ள கடிதத்தில் மலேசிய அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி, ஜர்ஜென் அனுப்பியுள்ள கடிதத்தில், மலேசிய அரசாங்கத்தின் கோரிக்கையை உறுதிசெய்ததோடு, தாங்கள் கடந்த ஆகஸ்ட் 9 -ம் தேதியே அந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.