Home Featured நாடு பாங்காக் குண்டுவெடிப்பில் தொடர்பு: இரு மலேசியர்கள் கைது!

பாங்காக் குண்டுவெடிப்பில் தொடர்பு: இரு மலேசியர்கள் கைது!

607
0
SHARE
Ad

khalid-abu-bakar-perhimpunan-8-meiகோலாலம்பூர் – கடந்த மாதம் பாங்காக்கில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு மலேசியர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறுகையில், “இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் ஒரு பாகிஸ்தான் பிரஜை மற்றும் இரண்டு மலேசியர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.”

“இந்த விசாரணையில் தாய் காவல்துறைக்கு உதவி செய்து வருகின்றோம்” என்று காலிட் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும், கைது செய்யப்பட்டவர்களை தாய்லாந்து காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.