Home Featured நாடு அனினா வழக்கிற்கு எதிராக நஜிப் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது!

அனினா வழக்கிற்கு எதிராக நஜிப் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது!

513
0
SHARE
Ad

Anina Najibகோலாலம்பூர் – முன்னாள் லங்காவி அம்னோ மகளிர் உறுப்பினர் அனினாவின் மனுவிற்கு எதிரான தற்காப்பு மனுவை அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், கட்சியின் நிர்வாகச் செயலாளர் அப்துல் ராவுப் யூசோப்பும் இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதை வழக்கறிஞர் முகமட் ஹாபரிசாம் ஹாரும் மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அனினாவின் வழக்கை எதிர்த்தும், அந்த மனு மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை கோரியும் நஜிப் தரப்பில் இருந்து இன்று மனுத்தாக்கல் செய்யப்படும் என நேற்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice