Home உலகம் “புகைமூட்டத்தில் இருந்து விடுபட 3 ஆண்டுகள் ஆகும்” – இந்தோனேசிய அதிபர் விடோடோ

“புகைமூட்டத்தில் இருந்து விடுபட 3 ஆண்டுகள் ஆகும்” – இந்தோனேசிய அதிபர் விடோடோ

463
0
SHARE
Ad

vidodo1ஜகார்த்தா – இந்தோனேசியா காடுகளில் பற்றி எரியும் தீயினால் உருவான புகைமூட்டம் மலேசியா உள்ளிட்ட அண்டை நாடுகளையும் ஆக்கிரமித்து வரும் நிலையில், இந்த புகைமூட்டத்தில் இருந்து விடுபட மூன்று ஆண்டுகள் பிடிக்கும் என அந்நாட்டின் பிரதமர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில், “புகைமூட்டத்தை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஏறக்குறைய 3,700 இராணுவ வீரர்களையும், 8000 காவல் துறை அதிகாரிகளையும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தி உள்ளோம். மேலும், நான்கு தீ அணைப்பு விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும், இதில் இருந்து முற்றிலும் விடுபட 3 வருடங்கள் ஆகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.