காவல்துறையின் இந்த குற்றச்சாட்டு ஃபிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 200-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த திருட்டு செல்பேசிகள் இந்த தளத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும், இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட்ட காவல்துறை அந்த ஆறு குற்றவாளிகளையும் கைது செய்துள்ளது. தற்போது அவர்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விட, ஃபிளிப்கார்ட் நிறுவனம் எப்படி இத்தைகைய திருடர்கள் மிக எளிதாக விற்பனை செய்யும் அளவிற்கு பாதுகாப்பற்றதாக உள்ளது என்ற சர்ச்சை எழுந்துள்ளது.