லிம் யூன் சூ என்ற அந்த நபர் 8 நாட்கள் தடுப்புக் காவலுக்குப் பிறகு நேற்று விடுதலை செய்யப்பட்டதாக கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் சைனுடின் அஹமட் உறுதிப்படுத்தியுள்ளார்.
“அவர் மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை, அதனால் அவர் விடுவிக்கப்பட்டார்” என்று சைனுடின் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 15-ம் தேதி சீனாவில் இருந்து மலேசியா திரும்பிய போது லிம்மை காவல்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவர் மீதான வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.