ஷாருக்கான் தனது பதிவில், “நாட்டில் தற்போது நிலவிவரும் மதரீதியான சகிப்புத்தன்மையற்ற நிலை பெரும் கவலையளிக்கிறது. இந்த நிலை தொடருமானால், முன்னணி நாடாக இந்தியா உருவாவது கடினம் தான்” என்று கூறியிருந்தார்.
ஷாரூக்கானின் இந்த கருத்து உண்மைநிலையை எடுத்துரைப்பதாக இருக்கிறது என ஒரு சாரார் கூறினாலும், பலர் ‘”ஷாருக்கான் பாகிஸ்தான் நாட்டின் ஏஜென்ட் போன்று பேசுகிறார்” என்று விமர்சித்து வருகின்றனர். மேலும் அவரது கருத்திற்காக, அவர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை பாகிஸ்தானிற்கு நாடு கடத்த வேண்டும் என பெண் சாமியார் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.