Home Featured நாடு சோட்டாராஜனுக்கு சிறையில் ஏசி அறை!

சோட்டாராஜனுக்கு சிறையில் ஏசி அறை!

581
0
SHARE
Ad

chotsபுதுடெல்லி – டெல்லியில் உள்ள குற்றப்புலனாய்வுத் துறை தலைமை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள குற்றவாளி சோட்டாராஜனுக்கு அங்கு குளிரூட்ட வசதியுடன் (ஏர்கான்) கூடிய அறை வழங்கப்பட்டுள்ளது.

தனியாக குளியலறையும் கொண்ட அந்த அறையில் தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டு சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த அறையை சுற்றி, ஏ.கே. 47 ரக துப்பாக்கி ஏந்திய காவல்துறையினருடன் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

#TamilSchoolmychoice

மோப்ப நாய்களும் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.அதோடு வெடிகுண்டு நிபுணர்களும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தாவூத் இப்ராகிம் போன்ற மும்பையின் மிகப் பெரிய தாதாக்களால் அவரது உயிருக்கு ஆபத்து நேரும் என்று அஞ்சப்படுவதால், இத்தனை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா கடந்த 20 வருடங்களாக தேடி வந்த நிழல் உலக தாதா சோட்டா ராஜன், இந்தோனேசியாவின் பாலி தீவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைதானார்.

இது தொடர்பாக இந்தோனேசிய அரசு, இந்திய அரசுக்கு அளித்த தகவல் படி, அங்கு சென்ற இந்திய அதிகாரிகள் சோட்டா ராஜனை சமீபத்தில் இந்தியா அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.