Home Featured தமிழ் நாடு சென்னையை விட்டு பின்வாங்குமோ பன்னாட்டு நிறுவனங்கள்?

சென்னையை விட்டு பின்வாங்குமோ பன்னாட்டு நிறுவனங்கள்?

616
0
SHARE
Ad

itசென்னை – சிங்கார நகரமாக மட்டுமே காட்சி அளித்து வந்த சென்னையின் மறுபக்கம், கடந்த சில வாரங்களில் ஏற்பட்ட வெள்ளம் மூலம் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக அனைத்து ரீதியிலான கட்டமைப்புகளும் தோல்வியில் முடிந்துள்ளதாக பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இதன் எதிரொலிப்பு சென்னையில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் ஏற்படுமோ? என்ற அச்சம் அங்கு பணி புரியும் ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தில் குடியிருப்புப் பகுதிகள் மட்டுமல்லாது வணிக வளாகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் கட்டிடங்கள் மற்றும் வர்த்தக தளங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. பெரும்பாலான நிறுவனங்கள் விடுமுறையை அறிவித்துள்ள நிலையில், இதன் மூலம் மிகப் பெரிய அளவில் வர்த்தக இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

hclதொலைத்தொடர்பு நிறுவனங்களில் மட்டும் இதுவரை 300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

டிசிஎஸ், காக்னிசன்ட், எச்சிஎல், இன்போசிஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், பாதியில் நின்று போன பணிகளை இந்தியாவில் பிற மாநிலங்களில் இருக்கும் தங்கள் கிளைகள் மூலம் மேற்கொண்டு வருகின்றன.  ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிகளை மேற்கொண்டு வந்தாலும், இதே போன்ற நிலை மீண்டும் தொடர்ந்தால் இனி என்ன செய்வது? என்ற கேள்வி நிறுவனங்கள் மத்தியில் எழுந்துள்ளது .

cogniஇது குறித்து பெயர் வெளியிட விரும்பாத பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவர் கூறுகையில், “தற்போதய நிலையில், ‘ப்ராஜக்ட்டை’  (project) கையாளும் முக்கிய ஊழியர்கள் ஐதராபாத் போன்ற ஊர்களில் உள்ள கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சாதாரணமாக பெய்யத் தொடங்கி மழை இவ்வளவு உக்கிரமடையும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.”

“எப்போதும் தொலைநோக்குப் பார்வையுடனும்,  மிகப் பெரும் இலாபத்தை ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்துடனும் தான் பன்னாட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு உணர்வுகளுக்கும், சூழ்நிலைகளுக்கும் இடமில்லை. அதனால் நிறுவனங்கள் எடுக்க இருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என விரைவில் தெரியவரும்” என்று கூறியுள்ளார்.