Home Featured தமிழ் நாடு “நகரமே மூழ்குமாம், சித்தர் சொல்லிட்டாராம்” – வாட்சாப் சிரிப்புக்கு ரமணன் பதில்!

“நகரமே மூழ்குமாம், சித்தர் சொல்லிட்டாராம்” – வாட்சாப் சிரிப்புக்கு ரமணன் பதில்!

546
0
SHARE
Ad

ramananசென்னை – “சென்னையில் மீண்டும் கனமழை பெய்யும், சென்னை நகரமே மூழ்கும் அளவுக்கு தொடர் மழை பெய்யும், ஜோதிடம் பொய்க்காது. சித்தர் சொல்லிவிட்டார். பல்வேறு ஆதாரமான தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன” என சமீபத்தில் வாட்சாப்பில் மேலும் ஒரு சிரிப்பு வதந்தி ஒன்று வெளியானது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், “இந்த தகவலில் உண்மை இல்லை. நாளை வரை பெரும்பாலான இடக்களில் மழை பெய்யும். 8-ம் தேதிக்கு பின் மழை படிப்படியாக குறையும். அதனால் கனமழை, நகரம் மூழ்கும் என்று வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.