Home Featured உலகம் சிங்கப்பூர் நீரிணையில் கப்பல்கள் மோதி விபத்து: 6 பணியாளர்களைக் காணவில்லை!

சிங்கப்பூர் நீரிணையில் கப்பல்கள் மோதி விபத்து: 6 பணியாளர்களைக் காணவில்லை!

484
0
SHARE
Ad

சிங்கப்பூர் – நேற்று இரவு 8.14 மணியளவில் சிங்கப்பூர் நீரிணையில் ரசாயணக் கப்பல் ஒன்றுடன், சரக்குக் கப்பல் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில், சரக்குக் கப்பல் கடலில் மூழ்கியது.

indonesia singapore tanker collision‘தோர்கோ கிளவுட்’ என்ற அந்த சரக்குக் கப்பல் 10,385 டெட் வெயிட் டன் எடை கொண்டது. டேனிஸ் ஷிப்பர் தோர்க்கோ சிப்பிங் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த அந்தக் கப்பல் அண்டிகுவா மற்றும் பார்புடாவில் பதிவு செய்யப்பட்டது.

இவ்விபத்து நிகழ்ந்த போது, அதில் 12 பணியாளர்கள் இருந்துள்ளனர். அப்போதே 6 பணியாளர்கள் காப்பாற்றப்பட்டனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

தற்போது கப்பலில் இருந்த மற்ற 6 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.