Home Featured உலகம் சியங்மாய் பேருந்து விபத்து – இறந்தது 13 மலேசியர்கள்தான்!

சியங்மாய் பேருந்து விபத்து – இறந்தது 13 மலேசியர்கள்தான்!

737
0
SHARE
Ad

Selliyal Breaking Newsபேங்காக் – நேற்று தாய்லாந்து நாட்டின் சியங்மாய் நகரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 என தாய்லாந்து காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இதற்கு முன்னர் வந்த செய்திகளின்படி 16 மலேசியர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

13 மலேசியர்கள்தான் இறந்துள்ளனர் என்பதை தாய்லாந்துக்கான மலேசியத் தூதர் டத்தோ நசிரா ஹூசேனும் உறுதிப்படுத்தியுள்ளார்.