அந்த கடித்தத்தில் ஜெயலலிதா, “தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, விலங்குகள் வதை தடை சட்டத்தில், திருத்தம் கொண்டு வர வேண்டும். எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக கூட்டத் தொடரில் ஜல்லிக்கட்டு குறித்த மசோதா நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், நடப்பு கூட்டத் தொடரை நீட்டிக்க வேண்டும் அல்லது சிறப்பு கூட்டத் தொடர் நடத்த வேண்டும்” என்று அவர் அந்த கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், “ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக மத்திய அரசு, உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர், இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் தான், ஜெயலலிதா ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.