Home Featured தமிழ் நாடு திரைமறைவில் விஜயகாந்த் நடத்திய அரசியல் விளையாட்டு – அதிர்ச்சியில் திமுக!

திரைமறைவில் விஜயகாந்த் நடத்திய அரசியல் விளையாட்டு – அதிர்ச்சியில் திமுக!

622
0
SHARE
Ad

vaiko-vijayakanthசென்னை – தமிழக அரசியல் களத்தில், யாரும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்துள்ள விஜயகாந்த், 2016 தேர்தலின் துருப்புச் சீட்டு என்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தோம். அதனை மெய்பிக்கும் வகையில், கடந்த இரண்டு நாட்களாக அவர் விளையாடி உள்ள அரசியல் விளையாட்டு, அரசியல் ராஜதந்திரி என வர்ணிக்கப்படும் திமுக தலைவர் கருணாநிதியையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

அதிமுகவைத் தவிர திமுக உட்பட முக்கிய கட்சிகளிடமிருந்து கூட்டணிக்கான நேரடியான அழைப்புகள் விஜயகாந்திற்கு வந்துவிட்டன. தமிழக பாஜக-வின் முக்கியத் தலைவர்கள் விஜயகாந்தை சந்தித்த அடுத்த சில தினங்களில், வைகோ தலைமையில் மக்கள் நலக் கூட்டு இயக்கத்தினர் அவரை சந்தித்துப் பேசினர். அவர்கள் சந்தித்து சென்ற, அடுத்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே திமுக தலைவரிடம் இருந்து நேரடியான அழைப்பு விஜயகாந்திற்கு வந்தது. நேற்று காங்கிரசின் தமிழகத் தலைவர் இளங்கோவனும் எங்கள் கூட்டணிக்கு தேமுதிக வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். பாமாக ஏற்கனவே பல்வேறு வழிகளில் விஜயகாந்திற்கு, அழைப்புகளை விடுத்துக் கொண்டிருக்கிறது.

pon-radhakrishnan-vijayakanthஇப்படி குறுகிய கால இடைவெளிகளில், விஜயகாந்திற்கு பல்வேறு தலைவர்களிடம் இருந்து அடுத்தடுத்த அழைப்புகள் வந்ததன் பின்னணியில் அவர் நடத்திய நாடகம், பிரபல ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அம்பலமாகி உள்ளது. பாஜக-வின் தமிழக தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், அவர்களைத் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, முத்தரசன், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் விஜயகாந்தை சந்தித்ததற்கு காரணம், அவர், அந்த கட்சிகளுக்கு நேரடியாக விடுத்த அழைப்பு தானாம்.

#TamilSchoolmychoice

தொடர்ச்சியாக பல்வேறு கட்சிகளின் சந்திப்புகளைக் காரணம் காட்டி அரசியல் அரங்கில், தனக்கான செல்வாக்கினை அதிகரிக்கவே விஜயகாந்த் இப்படி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி அவர் மேற்கொண்ட முயற்சியின் பலன் தான், கருணாநிதியின் நேரடியான அழைப்பு.

விஜயகாந்த் ஒருவேளை மக்கள் நலக் கூட்டணி பக்கம் சாய்ந்துவிட்டால், அது திமுகவிற்கு மிகப் பெரிய அடியாக அமையும் என்பதை உணர்ந்து தான், கருணாநிதி, அத்தகைய அழைப்பினை விடுத்துள்ளார். இதன் மூலம் தான் நினைத்த காரியம் நடந்த களிப்பில் இருக்கும் விஜயகாந்த், இனி திமுகவிடம் தாரளாமாக கூட்டணி பேரம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

vijayakanth-slams-karunanidhiஅரசியல் நடுநிலையாளர்கள் ஆருடங்களின் படி, விஜயகாந்த், ஒருவேளை திமுக பக்கம் சேர்ந்தால், ஒன்று கூட்டணி ஆட்சி அல்லது மிகப் பெரிய அளவிலான சீட்டுகளைப் பெற்று துணை முதல்வர் பதவியை வலியுறுத்துவார் என்று கூறுகின்றனர். அதன்  முன்னோட்டமாகவே விஜயகாந்த், தனது அரசியல் காய்களை நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, தேமுதிகவை நம்பி அரசியல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்டாலின் அபிமானிகள் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

– சுரேஷ்