Home Featured தமிழ் நாடு “அந்த அம்மாவின் பேனரைக் கிழி” – விஜயகாந்த் உத்தரவால் தஞ்சையில் ரகளை!

“அந்த அம்மாவின் பேனரைக் கிழி” – விஜயகாந்த் உத்தரவால் தஞ்சையில் ரகளை!

502
0
SHARE
Ad

vijayakanth00தஞ்சை – தஞ்சையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்கக் கோரி, தேமுதிக கட்சியினர் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தும் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அவரது மேடைக்கு எதிராக, நிழற்குடை ஒன்றில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பதாகை (பேனர்) இருந்தது. அதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், தன் தொண்டர்களிடம், “அந்த அம்மாவின் பேனரைக் கிழி” என உத்தரவிட்டார். தொண்டர்களும் பதாகையை கிழித்தனர்.

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட அதிமுக தொண்டர்கள், தஞ்சை முழுவதும் உள்ள விஜயகாந்தின் பதாகைகளை கிழித்து வருகின்றனர். இதன் காரணமாக, இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.