Home Featured நாடு 2.6 பில்லியன் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது எம்ஏசிசி!

2.6 பில்லியன் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது எம்ஏசிசி!

556
0
SHARE
Ad

MACCகோலாலம்பூர் – 2.6 பில்லியன் ரிங்கிட் அரசியல் நன்கொடை மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் தொடர்பான விசாரணை அறிக்கையை, சட்டத்துறைத் தலைவரிடம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று சமர்ப்பித்தது.

இன்று டிசம்பர் 31-ம் தேதி வியாழக்கிழமை எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் மற்றும் 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை தொடர்பான விசாரணை அறிக்கை இரண்டு தொகுப்புகள் சட்டத்துறைத் தலைவரிடம் அளிக்கப்பட்டது என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணைத் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ மொகமட் சுக்ரி அப்துல் தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice