இது குறித்து தலைமையிடம் முறையிட்டுள்ள திமுகவினர், “கடந்த 2011-ன் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த விஜயகாந்த், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் தன்னால் தான் ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தார் என்று கூறினார். இந்த செயல் ஒருவேளை திமுக கூட்டணியில் அவர் வந்தாலும் தொடரும். பொதுக்குழுவில், ‘வெட்கமே இல்லாமல் என்னோடு கூட்டணி அமைக்க திமுக முயற்சிக்கிறது’ என்று அவர் கூறிய பின்னர், இனியும் திமுக அவருடன் கூட்டணி வைத்து தரம் தாழ வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொண்டர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்ட திமுக தலைமை, விஜயகாந்துடன் கூட்டணி வேண்டாம் என்ற முடிவிற்கு வந்துள்ளதாக இரகசியத் தகவல்கள் வந்துள்ளன.