Home Featured நாடு தீவிரக் கண்காணிப்பில் இரயில் மற்றும் விமான நிலையங்கள் – லியாவ் அறிவிப்பு!

தீவிரக் கண்காணிப்பில் இரயில் மற்றும் விமான நிலையங்கள் – லியாவ் அறிவிப்பு!

763
0
SHARE
Ad

Liow-Tiong-Laiபுத்ராஜெயா – தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், மலேசியாவிலுள்ள அனைத்து விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் கப்பல் துறைமுகங்கள் ஆகியவற்றில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் உள்ள ஜாலான்ஆலோர் என்ற இடத்தில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததால், மலேசியா தனது பாதுகாப்பு வளையத்தை மேலும் பலப்படுத்தியுள்ளதாகவும் லியாவ் குறிப்பிட்டுள்ளார்.

“விமான நிலையங்கள் மற்றும் இரயில் நிலையங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால் அவற்றில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம்”

#TamilSchoolmychoice

“கண்காணிப்புக் கருவிகளை அதிகரித்துள்ளோம். அந்தப் பகுதிகளில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்துவோம்” என்றும் லியாவ் தெரிவித்துள்ளார்.