கோலாலம்பூரை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா, இந்தோனேசியா, சீனா என சுமார் 30 நாடுகளில் இந்த நிறுவனம் இயங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் குறிப்பிட வேண்டிய, மிக முக்கியமான ஒன்று என்னவென்றால், இந்நிறுவனம் முற்றிலும் ஹலால் முறையில் ஷரியா இணக்கம் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து ஷேக் முஸாபர் ஷுகொர் கூறுகையில், “மருந்து, ஃபேஷன், ஒப்பனை மற்றும் அழகுப் பொருட்கள், உணவு மற்றும் குளிர்பானங்கள், அத்துடன் வங்கி மற்றும் நிதி சேவைகள் என ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் ஏற்படுத்த இருக்கிறோம்.”
“எங்களது ஒரே இலக்கு அமேசான் மற்றும் அலிபாபா நிறுவனங்களுக்கு கடும் போட்டி அளிப்பதாகும். ஒரு நாள், எங்கள் நிறுவனம் அந்நிறுவனங்களையும் விஞ்சி நிற்கும்” என்று கூறியுள்ளார்.