கியூபா பிரதி நிதிகளுக்கும் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சூடான வாதப் பிரதி வாதங்கள் இடம்பெறுகையில், இலங்கைக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா குரல்கொடுத்தன.
இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அமெரிக்க தீர்மானம் நலிவடையச் செய்வதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டன.
இவ்வேளையில், குறுக்கீடு செய்து களமிறங்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள், கனடா இராஜதந்திரிகள் ஆகியோர் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு முழுமையான ஆதரவை வெளியிட்டதுடன், அதில் காட்டமான முன்மொழிவுகளை உள்ளடக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
எனினும், குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியப் பிரதிநிதிகள் மௌனம் காத்தனர். அமெரிக்க தீர்மான விஷயத்தில் பிரதான பாத்திரத்தை வகிக்கும் இலங்கைப் பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.
ஜெனிவா இராஜதந்திர போராட்டம் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா இன்று அதிகாரப்பூர்வமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கின்றது.
Comments