எந்த ஒரு முடிவை மொகிதின் எடுத்தாலும், அவர் அம்னோவிற்கு கொடுத்துள்ள வாக்குறுதிகள் நினைவில் இருக்கட்டும் என்றும் சாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டமொன்றில் பேசிய சாஹிட், “எனக்குத் தெரிந்து, மொகிதின் ஒரு தீவிரமான அம்னோ உறுப்பினர். தற்போதைய சூழ்நிலையில் அவர் அம்னோ துணைத்தலைவராக இல்லாவிட்டாலும் கூட, பாகோ மக்களின் பிரதிநிதியாக உள்ளார். அது தான் முக்கியம்”
“எனவே சோகமாக அல்லது கோபமாக இருக்கும் போது எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம் என நான் டான்ஸ்ரீ-ஐ ( மொகிதினை) கேட்டுக் கொள்கிறேன். மாறாக கட்சி பயனடையும் வகையில் எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அவர் யோசிக்க வேண்டும்” என்றும் சாஹிட் தெரிவித்துள்ளார்.