பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் ஜோஷி கம்பால் தாக்கியதில் குதிரையின் கால் உடைந்ததாக காணொளிக் காட்சிகள் வெளியாகியது. குதிரையை தாக்கியதாக கணேஷ் ஜோஷி சட்டமன்ற உறுப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கு விலங்கு நல வாரியம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. விலங்குகள் மீது அதிகம் பாசம் வைத்துள்ள நடிகை திரிஷா குதிரை மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினருக்கு டுவிட்டர் இணையத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குதிரையின் காலை உடைத்ததாக” என் மீது குற்றம் நிருபிக்கப்பட்டால் என்னுடைய காலை இழக்க தயார்,” என்று பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் ஜோஷி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.