Home Featured கலையுலகம் நிருபர் கன்னத்தில் ”பளார்” விட்ட சன்னி லியோன்!

நிருபர் கன்னத்தில் ”பளார்” விட்ட சன்னி லியோன்!

1033
0
SHARE
Ad

sunny-leone1சூரத் – ஹோலி பண்டிகையின் போது கன்னத்தில் வண்ண பொடிகளை பூசுவதுதான் வழக்கம். ஆனால் தேசிய ஊடகத்தின் நிருபர் ஒருவர் ஹோலி பண்டிகை அன்று சன்னி லியோன் கையால் கன்னத்தில் அறை வாங்கியுள்ளார்.

ஹோலி பண்டிகையை ஓட்டி குஜராத்தின் சூரத் நகரில் சன்னி லியோன் கலந்துக்கொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக ஹோட்டலில் தங்கியிருந்த சன்னி லியோனிடம் தேசிய ஊடகத்தை சேர்ந்த நிருபர் ஒருவர் பேட்டி கண்டுள்ளார்.

பேட்டியின் போது இரவு நிகழ்ச்சிக்கு எவ்வளவு கட்டணம் என்று கிண்டலாக கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சன்னி லியோன், கேள்வி கேட்ட நிருபரை ஓங்கி கன்னத்தில் அறைந்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சன்னி லியோனின் கணவர் டேனியல் வெபர் கூறியதாவது; “சன்னி லியோன் நிருபரின் கேள்விக்கு சரியான பதிலை அளித்துவிட்டார். எனவே, காவல்துறையில் புகார் அளிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.