Home Featured நாடு அடுத்த அம்னோ கூட்டத்தில் மொகிதின், முக்ரிஸ் மீது நடவடிக்கை – சாஹிட் அறிவிப்பு!

அடுத்த அம்னோ கூட்டத்தில் மொகிதின், முக்ரிஸ் மீது நடவடிக்கை – சாஹிட் அறிவிப்பு!

555
0
SHARE
Ad

zahidhamidicitizen1606கோலாலம்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டதற்காக முன்னாள் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மற்றும் முன்னாள் கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் ஆகியோருக்கு எதிராக அடுத்த அம்னோ உச்ச மன்றக் கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி அறிவித்துள்ளார்.

அம்மாநாட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தலைமைத்துவத்திற்கு எதிராக இவர்கள் இருவரையும் சேர்த்து மொத்தம் 18 பேச்சாளர்கள் உரையாற்றினர்.

அம்மாநாட்டில் கலந்து கொள்ளும் அம்னோ உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கம் செய்யக் கூட தயங்க மாட்டோம் என அம்னோ பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் கடந்த சனிக்கிழமையே அறிவித்துவிட்ட நிலையில், மொகிதின் மற்றும் முக்ரிஸ் மீது அது போன்ற நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice