Home Featured தமிழ் நாடு மே 10-ஆம் தேதிக்குள் ஜெயலலிதா சிறைக்கு செல்வார் – சுப்பிரமணியசாமி பேட்டி!

மே 10-ஆம் தேதிக்குள் ஜெயலலிதா சிறைக்கு செல்வார் – சுப்பிரமணியசாமி பேட்டி!

561
0
SHARE
Ad

subramaniyan swamy, jayalalitha,புதுடெல்லி – டெல்லியில் உள்ள கான்ஸ்ட்டிடியூஷன் கிளப்பில் தற்கால தமிழக அரசியல் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழக அரசியல் நிலவரம், இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்தை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறியதாவது:

“சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு மே மாதம் 10-ஆம் தேதிக்குள் வர வாய்ப்புள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறை செல்வது உறுதி. தமிழக தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட மேலிடம் உத்தரவிட்டால், கண்டிப்பாக பிரச்சாரம் செய்வேன்” என சுப்பிரமணியசாமி கூறினார்.