ஜக்டீப் மறைந்த ஜசெக தலைவர் கர்ப்பால் சிங்கின் மகனுமாவார். ஜசெக பினாங்கு மாநில துணைத் தலைவராகவும் அவர் செயலாற்றி வருகின்றார்.
அவர் இன்று காலை 9.00 மணியளவில் கூச்சிங் விமான நிலையம் வந்தடைந்தபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அவரிடம் குடிநுழைவுத் துறை தெரிவித்தது.
அவர் கூச்சிங் விமான நிலையத்தில், குடிநுழைவுத் துறை அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இன்று காலை முதல் டுவிட்டர் பக்கங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
இதற்கிடையில் நேற்று பேராக் ஜசெக தலைவரான இங்கா கோர் மிங் சரவாக்கின் சிபு நகரிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.
நேற்று கோத்தா கினபாலு நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு பிகேஆர் கட்சித் தலைவர் ரபிசி ரம்லியும் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றார்.