மாறாக, மூன்றாவது பெரிய அணியாக-அரசியல் சக்தியாக தான் பார்ப்பது சீமானைத்தான் என்று கூறியுள்ளார்.
இது மூத்த, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான இளங்கோவன் சீமானுக்கு வழங்கியுள்ள அங்கீகாரம் என்றாலும், அதே இளங்கோவன்தான் இதே சீமானை “பரதேசிகளெல்லாம் சீமான் என்று பெயர் வைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை” எனக் கடுமையாகச் சாடியிருந்தார்.
இளங்கோவனுக்கு பதிலளித்திருந்த சீமான், “பரவாயில்லை நான் பரதேசியாகவே இருக்கிறேன். மூத்த அண்ணன் இளங்கோவன்தானே அப்படி கூறியிருக்கின்றார். பரவாயில்லை” எனக் கூறியிருந்தார்.