Home Featured இந்தியா கல்லூரி மாணவி கற்பழித்து கொலை: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை – உம்மன் சாண்டி உறுதி!

கல்லூரி மாணவி கற்பழித்து கொலை: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை – உம்மன் சாண்டி உறுதி!

850
0
SHARE
Ad

umman sandiபெரும்பாவூர் – கேரளாவில் சட்ட கல்லூரி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி உறுதி அளித்துள்ளார்.

எர்ணாகுளத்தை அடுத்த பெரும்பாவூரில் சட்டக்கல்லூரி தலித் மாணவி கற்பழிக்கப்பட்டு, கொடூரமான முறையில் கத்தியால் பல இடங்களில் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 5-க்கும் மேற்பட்டோரை பிடித்து போலீஸ் விசாரித்து வருகிறது.

இதனிடையே மாணவி கொலை குறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையம், மனித உரிமை ஆணையம் ஆகியவை உத்தரவிட்டன.

#TamilSchoolmychoice

இந்நிலையில் மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து உம்மன் சாண்டி ஆறுதல் கூறினார். மாணவி சடலம் வைக்கப்பட்டுள்ள பெரும்பாவூர் மருத்துவமனைக்கு சென்ற உம்மன் சாண்டியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

பின்னர் போலீசார் உதவியுடன் முதல்வர் உம்மன் சாண்டி மருத்துவமனைக்குள் நுழைந்தார். மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து பேசிய உம்மன் சாண்டி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

Kerala-woman-s-rape-CM-visits-hospitalஅப்போது, உம்மன் சாண்டி கூறியதாவது; மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவம் மாநிலத்திற்கே அவமானம். மாணவியின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முடிவு செய்து உள்ளோம்.

மாணவியின் சகோதரிக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர், நாங்கள் தேவையானதை செய்வோம் என்று உம்மன் சாண்டி கூறினார்.