புதுச்சேரி – கடந்த மே 16ஆம் தேதி நடந்த தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 17 தொகுதிகளை வென்ற காங்கிரஸ் கூட்டணி சார்பாக முன்னாள் அமைச்சர் நாராயணசாமி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரி முதல்வராகும் போட்டியில் இருந்த மற்றொரு வேட்பாளரான நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் புதுச்சேரியில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சாலை மறியல்கள், கல்வீச்சுகள் என நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் ஆட்சேப போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.




