விஜய் சேதுபதி, பா.ரஞ்சித், கலையரசன் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் கூட இதில் இணைந்து கொண்டு அவர்களின் விடுதலையை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகளும், அமைப்புகளும் இன்று கோட்டை நோக்கிப் பேரணி நடத்துகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இப்பேரணி மாற்றுப் பாதை ஒன்றில் நடைபெறவுள்ளது.
இது குறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் பேசுகையில், பேரணி திட்டமிட்டபடி நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Comments