Home Featured நாடு 1எம்டிபி அமெரிக்க வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை – லிம் லிப் எங் புகார்!

1எம்டிபி அமெரிக்க வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை – லிம் லிப் எங் புகார்!

498
0
SHARE
Ad

Lim-Lip-Engகோலாலம்பூர் – 1எம்டிபி தொடர்பில் அமெரிக்க நீதித்துறை பதிவு செய்துள்ள சிவில் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளோருக்கு எதிராக ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் இன்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

“டிஓஜெ மற்றும் எப்பிஐ பட்டியலிட்டுள்ளவர்களான, பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் வளர்ப்பு மகன் ரிசா அஜிஸ் மற்றும் ஜோ லோ மற்றும் மலேசிய அதிகாரி 1 ஆகியோர் மீது காவல்துறை விசாரணை அமைக்க வேண்டும்” என்று லிம் லிப் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“1எம்டிபியில் இருந்து திருடப்பட்டதாக எப்பிஐ கூறும், 3.5 மில்லியன் அமெரிக்க டாலர் எங்கே என காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்” என்று கோலாலம்பூரின் டாங் வாங்கி காவல்துறைத் தலைமையகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய லிம் தெரிவித்துள்ளார்.

(கோப்புப்படம்)