Home Featured நாடு பூச்சோங் தாக்குதல்: இருவர் மீது குற்றச்சாட்டு!

பூச்சோங் தாக்குதல்: இருவர் மீது குற்றச்சாட்டு!

475
0
SHARE
Ad

puchong-movidaகோலாலம்பூர் – கடந்த மாதம் பூச்சோங்கில் மோவிடா இரவு கேளிக்கை விடுதி ஒன்றில், கையெறி குண்டை வீசி 8 பேர் காயமடைவதற்குக் காரணமான இருவர் மீது இன்று அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய இமாம் மாயுடின் கர்ஜோனோ (வயது 20), ஜோனியஸ் ஆண்ட்ரி (வயது 24) ஆகிய இருவரின் மீதான அக்குற்றச்சாட்டுகளுக்கான தீர்ப்பு வரும் செப்டம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி அசானிஸ் அஸ்மான் அறிவித்தார்.

மேலும், அவர்கள் இருவருக்கும் பிணை வழங்கவும் அவர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice