Home Featured இந்தியா மான் வேட்டை வழக்கு: சல்மான் கான் விடுதலை!

மான் வேட்டை வழக்கு: சல்மான் கான் விடுதலை!

592
0
SHARE
Ad

salman3455புதுடெல்லி – மான் வேட்டையாடிய வழக்கில் சிக்கியிருந்த சல்மான் கானுக்கு கீழ் நீதிமன்றம் விதித்திருந்த தண்டனையை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இன்று இரத்து செய்தது.

ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அரிய வகை மான்களை வேட்டையாடியதாக, கடந்த 1998-ம் ஆண்டு அவர் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இது தொடர்பாகக் கடந்த 2006-ம் ஆண்டு கீழ்நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், 2007-ம் ஆண்டு சல்மான் கான் பதிவு செய்த மேல்முறையீட்டு மனுவிற்கான தீர்ப்பு இன்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அந்த இரு வழக்குகளில் இருந்து சல்மான் கான் விடுவிக்கப்பட்டார்.