Home Featured நாடு தங்கேஸ்வரி : சட்டமன்றத் தலைவராக அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!

தங்கேஸ்வரி : சட்டமன்றத் தலைவராக அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!

803
0
SHARE
Ad

 

thangeswari-devamany-sivakumar-mohanaஈப்போ – பேராக் மாநில சட்டமன்றத்தின் அவைத் தலைவர் பதவி மீண்டும் மஇகாவுக்கே ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பதவியை ஏற்கும் முதல் இந்தியப் பெண்மணியாக திருமதி தங்கேஸ்வரி திகழ்கின்றார்.

இன்று பேராக் சட்டமன்றத்தில் தேசிய முன்னணியின் சார்பாக முன்மொழியப்பட்ட  தங்கேஸ்வரி, ஒரு வழக்கறிஞராவார்.

#TamilSchoolmychoice

சட்டமன்ற அவைத் தலைவருக்கான தேர்தலில் அவரை எதிர்த்து ஜசெகவைச் சேர்ந்த சிவகுமார் போட்டியிட்டார். சிவகுமாருக்கு 24 வாக்குகள் கிடைத்தன. தங்கேஸ்வரிக்கு 30 வாக்குகள் கிடைத்தன.

இதைத் தொடர்ந்து 6 வாக்குகள் பெரும்பான்மையில் தங்கேஸ்வரி அதிகாரபூர்வமாக, பேராக் சட்டமன்ற அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.