Home Featured நாடு மலேசிய தினத்தன்று ஐஎஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தயார் – காலிட் அறிவிப்பு!

மலேசிய தினத்தன்று ஐஎஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தயார் – காலிட் அறிவிப்பு!

577
0
SHARE
Ad

khalid-abu-bakar-perhimpunan-8-meiகோலாலம்பூர் – வரும் செப்டம்பர் 16-ம் தேதி மலேசிய தினக் கொண்டாட்டத்தின் போது, நாட்டில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்துவிடாமல் தடுக்க, காவல்துறை பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது.

இது குறித்து தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அது டாயிஸ் இடமிருந்து (ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு இன்னொரு பெயர்) வந்தாலோ அல்லது வேறு ஏதாவது அமைப்பிடமிருந்து வந்தாலோ, எல்லா காவல்துறை அதிகாரிகளும் அதை எதிர்க்கொள்ளத் தயாராக வைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.