Home Featured நாடு மலேசியக் கப்பல் இஸ்ரேல் படையினரால் சிறைபிடிப்பு!

மலேசியக் கப்பல் இஸ்ரேல் படையினரால் சிறைபிடிப்பு!

819
0
SHARE
Ad

the-zaytouna-olivia

கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை, மலேசியச் கப்பல் ஒன்று, இஸ்ரேல் படையினரால் சிறை பிடிக்கப்பட்டது.

‘தி சாய்டாவ்னா – ஒலிவியா’ என்ற அந்தக் கப்பலில், 3 பணியாளர்கள், 10 ஆர்வலர்கள் உள்ளனர். அவர்களுள் மலேசியா சார்பில் பிரதிநிதித்துச் சென்ற டாக்டர் பவுசியா மொகமட் ஹாசனும் உள்ளார்.

நேற்று மலேசிய நேரப்படி 8.58 மணியளவில் அக்கப்பல் சிறை பிடிக்கப்பட்டதாக மை கேர் (Humanitarian Care Malaysia) அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

ஆஸ்டோட் துறைமுகம் வரையில் இஸ்ரேல் இராணுவத்தினரால், அக்கப்பல் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘காசா செல்லும் மகளிர் படகு – Women’s Boat to Gaza’ என்ற கருப்பொருளின் அடிப்படையில், காசாவில் இஸ்ரேல் முற்றுகையை எதிர்க்கும் வகையில் பாலஸ்தீன மக்களுக்கு உலகளாவிய ஒற்றுமையை வலியுறுத்தி அக்கப்பல் சென்றது குறிப்பிடத்தக்கது.