Home Featured நாடு மக்கள் பிரகடனம்: பேரரசர் ஏற்றுக்கொள்ளவில்லை – மகாதீர் அறிவிப்பு

மக்கள் பிரகடனம்: பேரரசர் ஏற்றுக்கொள்ளவில்லை – மகாதீர் அறிவிப்பு

715
0
SHARE
Ad

Tun Mahathirபுத்ராஜெயா – ‘மக்கள் பிரகடனத்தை’ செயல்படுத்த, தன்னால் பேரரசரிடம் (Yang Di-Pertuan Agong) பேசி அவரை ஏற்றுக் கொள்ள செய்ய இயலவில்லை என்பதை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் ஒப்புக் கொண்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கடந்த மாதம் பேரரசரைத் தான் சந்தித்ததாகவும், 1.2 மில்லியன் கையெழுத்துடன் கூடிய அந்த ‘மக்கள் பிரகடனம்’ தொடர்பில் நடவடிக்கை எடுக்க, தன்னால் பேரரசருடன் பேசி அவரை ஏற்றுக் கொள்ளச் செய்ய இயலவில்லை என்று தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice