Home Featured நாடு பெர்சே 5 : சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை

பெர்சே 5 : சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை

508
0
SHARE
Ad

Khalid Abu Bakarகோலாலம்பூர் – வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள பெர்சே 5 பேரணியில் விதிமுறைகளை மீறுவோர் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும் என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுக்கும் போது காவல்துறையினரின் மீது யாரும் ஆத்திரமடைய வேண்டாம் என்று தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

“ஆமாம்.. நாங்கள் தயாராக இருக்கிறோம்”

“அனைவரும் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மஞ்சள் சட்டையோ அல்லது சிவப்புச் சட்டையோ சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் போது எங்கள் மீது ஆத்திரமடையாதீர்கள்” என்று காலிட் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice