Home Featured தமிழ் நாடு அலங்காநல்லூரில் கலவரம்: அறப்போராட்டத்தில் பெரிய ரத்தக்கறை – கமல் கருத்து!

அலங்காநல்லூரில் கலவரம்: அறப்போராட்டத்தில் பெரிய ரத்தக்கறை – கமல் கருத்து!

473
0
SHARE
Ad

kamal1அலங்காநல்லூர் – மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று திங்கட்கிழமை ஊர் கமிட்டி கூடி வரும் பிப்ரவரி 1-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

இந்நிலையில், அங்கு போராட்டக்காரர்களில் ஒரு தரப்பு வன்முறையில் ஈடுபட்டதால் அது கலவரமாக வெடித்தது.

இதனையடுத்து, அங்கு காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்டவர்கள் மீது தடியடி நடத்தி கலைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

இது குறித்து தனது டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், “அலங்காரநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை தமிழக அறபோராட்டச் சரித்திரத்தில் பெரிய ரத்தக்கறை” என்று வர்ணித்துள்ளார்.