Home அரசியல் சரவா ஊழல் குறித்து அரச விசாரணை அமைக்கப்பட வேண்டும்: கோரிக்கை வலுக்கிறது

சரவா ஊழல் குறித்து அரச விசாரணை அமைக்கப்பட வேண்டும்: கோரிக்கை வலுக்கிறது

513
0
SHARE
Ad

Taib-Mahmud-SLiderகோலாலம்பூர், மார்ச் 21-  சரவாக் மாநிலம் கடந்த சில நாட்களாக அனைத்து தரப்பு அரசியல் ஆர்வலர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ தாயிப் மாஹ்முட்டின் உறவினர்கள் என்று கூறிக்கொண்டு சிலரிடம் இரண்டு வழக்கறிஞர்கள் வெட்டுமர அனுமதிக்காக பேச்சுவார்த்தை நடத்தும் ஒளிநாடா (வீடியோ) வெளியிடப்பட்டதில் இருந்து சரவாக் மாநில அரசியல் சூடுபிடித்துள்ளது.

யூ டியூப் எனப்படும் ஒளிநாடா வலைத் தளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த ஒளிநாடாவை இதுவரை சுமார் 7 லட்சம் பேர் பார்த்துள்ளதாக புள்ளிவிவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தகைய வெட்டுமர அனுமதி குறித்த ஊழல்களோடு சேர்த்து சரவாக் மாநிலத்தின் மொத்த ஊழல் விவகாரங்களையும் விசாரிக்க ஓர் அரச விசாரணைக் குழு நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகின்றது.

#TamilSchoolmychoice

இணையத்ததளத்தின் வழி விடுக்கப்பட்டுள்ள இந்த அரச விசாரணைக் குழு நியமிக்கும் கோரிக்கைக்கு இதுவரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, சபா மாநிலத்தில் அடையாள அட்டை பிரச்சினை, தீவிரவாதிகள் ஊடுருவல் என பல  பிரச்சினைகளை தீர்க்கவே நேரம் போதாமல் போராடிக் கொண்டிருக்கும் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு புதிதாக முளைத்துள்ள சரவாக் அரசியல் பிரச்சனை பெரும் சவாலாக  இருந்து வருகிறது.