Home நாடு அக்மால் சாலே கோத்தா கினபாலுவில் கைது! வாக்குமூலத்திற்குப் பின் விடுவிக்கப்பட்டார்!

அக்மால் சாலே கோத்தா கினபாலுவில் கைது! வாக்குமூலத்திற்குப் பின் விடுவிக்கப்பட்டார்!

257
0
SHARE
Ad

கோத்தா கினபாலு : காலுறை விவகாரத்தில் தொடர்ந்து கடுமையாகப் பேசியும் அறிக்கைகள் விடுத்தும் வந்த அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் கோத்தாகினபாலுவில் கைது செய்யப்பட்டார். இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 5) காலை 10.30 மணியளவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோத்தாகினபாலு வந்தடைந்த அவரை காவல் துறை கைது செய்தது.

கோத்தா கினபாலு காவல் துறை தலைமையகத்தில் அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற்ற பின்னர் நண்பகல் 12.15 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார். நாளை சனிக்கிழமை (ஏப்ரல் 6) கோலாலம்பூர் காவல் துறையில் அவர் வாக்குமூலம் வழங்கவிருந்த நிலையில் இன்றே கைது செய்யப்பட்டார்.

அவருக்கான சட்ட உதவிகளை அம்னோ வழங்கும் என அம்னோ தலைமைச் செயலாளர் அஷ்ராப் வாஜ்டி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அக்மால் மீது 2 புகார்கள் காவல்துறையில் செய்யப்பட்டிருக்கின்றன.

தேச நிந்தனைச் சட்டம், தொடர்பு பல்ஊடக சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

தன் முகநூல் பக்கத்தில் வாள் ஒன்றுடன் காட்சியளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து அக்மால் மீதான கண்டனங்கள் வலுத்தன.

இந்நிலையில் இன அவதூறு கருத்துகளை வெளியிட்டதற்காக அம்னோவின் இளைஞர் பகுதித் தலைவர் அக்மால் கைது செய்யப்பட வேண்டும் என சரவாக் சுற்றுலா, படைப்பாற்றல் தொழில் மற்றும் கலைநிகழ்ச்சிகள் அமைச்சர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 4) காவல்துறையை வலியுறுத்தியிருந்தார்.