Home நாடு மாமன்னர் தலையிட்டதற்கு வரவேற்பு – ஆனால், பிரதமரும், காவல் துறையும் பொறுப்பேற்க வேண்டும்!

மாமன்னர் தலையிட்டதற்கு வரவேற்பு – ஆனால், பிரதமரும், காவல் துறையும் பொறுப்பேற்க வேண்டும்!

149
0
SHARE
Ad
பாரு பியான்

கூச்சிங் : அண்மையில் கே.கே.மார்ட் விவகாரத்தில் மாமன்னர் சுல்தான் இப்ராகிம் தலையிட்டதையும், அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசியதையும் வரவேற்றுள்ள சரவாக் அரசியல் தலைவர்கள் அதே வேளையில், இந்த விவகாரத்தை பிரதமரும், காவல் துறையும் கையாள வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்துள்ளனர்.

மாமன்னர் அக்கறை கொண்டு இந்த விவகாரத்தில் தலையிடுவதும், அரசியல் தலைவர்களை நேரடியாக சந்தித்துத் தீர்வு காண முயற்சி செய்வதும் பாராட்டத்தக்கது – அதே வேளையில், வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக எழுந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பிரதமரும் காவல் துறையும் பொறுப்பேற்று முன்வரவேண்டும் என சரவாக் சட்டமன்ற உறுப்பினரான பாயான் பாரு தெரிவித்துள்ளார்.

பாயான் பாரு பிகேஆர் கட்சியின் முன்னாள் தலைவருமாவார். மாமன்னர் தலையிடுவது, பிரதமர், காவல் துறையின் இயலாமையைக் காட்டுவதாக அமைந்துவிடக் கூடாது என்றும் பாயான் பாரு வலியுறுத்தினார்.