Home Featured உலகம் தென் பிலிப்பைன்சில் நிலநடுக்கம்! 6 பேர் மரணம்!

தென் பிலிப்பைன்சில் நிலநடுக்கம்! 6 பேர் மரணம்!

754
0
SHARE
Ad

philippines-mindanao-மணிலா -தென் பிலிப்பைன்ஸ் பகுதியை வெள்ளிக்கிழமை இரவு தாக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இதுவரையில் 6 பேர் மரணமடைந்துள்ளனர்.

மிண்டானோ தீவிலுள்ள சுரிகாவ் நகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி வெளியேறியுள்ளனர்.

இந்தப் பகுதி மக்கள் நேற்றிரவு உறக்கத்தில் ஆழ்ந்த பின்னர், 6.5 புள்ளிகள் வலுவான நிலநடுக்கம் தாக்கியது.

#TamilSchoolmychoice

இறந்தவர்களில் பலர் நிலநடுக்க அதிர்வால் விழுந்த பொருட்களின் தாக்கத்தாலும், அழுத்தத்தாலும் இறந்தனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.