Home Featured நாடு ‘எஸ்ஆர்சியிடம் அம்னோ நிதி பெற்றதற்கு ஆதாரம் இருந்தால் புகார் அளியுங்கள்’

‘எஸ்ஆர்சியிடம் அம்னோ நிதி பெற்றதற்கு ஆதாரம் இருந்தால் புகார் அளியுங்கள்’

664
0
SHARE
Ad

nazri_aziz__c221353_111127_970கோலாலம்பூர் – எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து அம்னோ நிதி வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு யாரிடமாவது ஆதாரம் இருந்தால், காவல்துறையில் புகார் அளிக்கும் படி அம்னோ உச்ச மன்றக் குழு உறுப்பினரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான நஸ்ரி அப்துல் அஜிஸ் தெரிவித்திருக்கிறார்.

“ஒவ்வொரு முறையும் குற்றச்சாட்டுகள் கூறப்படும் போது, நாங்கள் ஏன் அதற்குப் பதிலளிக்க வேண்டும்? ஆதாரத்தைக் காட்டுங்கள். கடந்த 2 ஆண்டுகளில் 1எம்டிபி அல்லது 2.6 பில்லியன் ரிங்கிட் தொடர்பாக என்னவெல்லாம் நடந்ததோ அது போதும். அதில் எந்த ஒரு குற்றமும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்று நஸ்ரி கூறியிருக்கிறார்.

 

#TamilSchoolmychoice