Home Featured நாடு பாதிரியார் கடத்தல் வழக்கில் சந்தேக நபர் கைது!

பாதிரியார் கடத்தல் வழக்கில் சந்தேக நபர் கைது!

961
0
SHARE
Ad

Pastor_Koh1கோலாலம்பூர் – பாதிரியார் ரேமண்ட் கோ மர்ம நபர்களால் கடத்தப்பட்ட வழக்கில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய காலிட், “கோ கடத்தல் சம்பவத்தில் அவருக்குத் தொடர்பு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். எனினும், இந்த வழக்கில் இன்னும் முழுமையாக விசாரணை நடத்துவோம்” என்று தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, பெட்டாலிங் ஜெயாவில், ரேமண்ட் கோ என்ற 62 வயதான பாதிரியார், சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அதற்கு சாட்சியாக இரகசிய கேமராவில் பதிவாகியிருந்த காணொளி இணையத்தில் வெளியானது.

எனினும், 3 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை ரேமண்ட் கோ இருக்கும் இடம் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.