Home Featured உலகம் கோல்ப் விளையாட்டாளர் டைகர் வுட்ஸ் கைது!

கோல்ப் விளையாட்டாளர் டைகர் வுட்ஸ் கைது!

665
0
SHARE
Ad

tiger-woods-mugshot-

வாஷிங்டன் – அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஜூபிடர் என்ற நகரில் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு போதையில் கார் ஓட்டிய குற்றத்திற்காக பிரபல கோல்ப் விளையாட்டாளர் டைகர் வுட்ஸ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சில மணி நேரங்கள் சிறையில் அடைக்கப்பட்ட அவர் அதன் பின்னர் சொந்த உத்தரவாதத்தின் பேரில் (ஜாமீன்) காவல் துறையினரால் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட டைகர் வுட்ஸ் புகைப்படத்தை (மேலே) காவல் துறை வெளியிட்டிருக்கிறது.