டிபிகேஎல்-ன் இந்த அறிவிப்பிற்கு பாஸ் கட்சியின் இறையாண்மை தகவல் பிரிவுத் தலைவர் முகமது கைருடின் அமான் ரசாலி பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, இந்த பீர் திருவிழாவின் ஏற்பாட்டு நிறுவனமான மைபீர் (எம்) செண்ட்ரியான் பெர்ஹாட், டிபிகேஎல் அனுமதிக்க மறுத்தத் தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறது.
மலேசியாவில் முதன் முதலாக கடந்த 2012-ம் ஆண்டு, புக்கிட் பிந்தாங்கில் பீர் திருவிழா நடைபெற்றது. அதில் 200 பேர் கலந்து கொண்டனர்.
கடந்த 2016-ம் ஆண்டு, பப்ளிக்கா ஷாப்பிங் கேலரியில் நடைபெற்ற பீர் திருவிழாவில் 3,500 பேர் கலந்து கொண்டு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பீரைச் சுவைத்தனர்.
இந்த ஆண்டும் நடைபெறவிருந்த திருவிழாவில் 6,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.